நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Thursday 24 January 2013

உயிர்நீத்த முத்துக்குமாரின் 14 கோரிக்கைகள்

               தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கை, கிட்டத்தட்ட அவரது மரண வாக்குமூலமாக அமைந்துள்ளது.
முத்துக்குமார் விநியோகித்த துண்டு அறிக்கையின் முழு விவரம்:
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...
              அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.
              உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?
              ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப் பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.
              மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்? கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார், இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!
இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், "தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...
              பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்களும், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.
              உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது. ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.
போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.
              உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது. இந்தக் கூட்டணி கொள்கைக் கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா! ஆக இந்திய இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
              இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குங்கள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள்.உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும்.
              "நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்" என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
              தமிழீழம் என்பது தமிழழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா?
சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றால், வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
              உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

              தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது.
டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப் போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள், அதுதான், இந்திய உளவுத்துறை, ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள்.
              வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
              களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
              அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே...
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
              உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?
வன்னியில், விடுதலைப்புலிகளு‘க்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா?
இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மௌனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை?
ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளுவர்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா. என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உண்மையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்.
இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது.
              ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது?
              
 புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளைஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில் கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே. ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளவாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி!
இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மௌனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்? நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா?
              
               அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும் கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடத்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்சே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில் ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே, பொன்சேகா போன்றோர் நார்கோ அனாலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுமே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீழ மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும். இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்குள் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை.99.

கு. முத்துக்குமரன் நினைவுநாள் (29-01-2009)


கு. முத்துக்குமரன் நினைவுநாள் (29-01-2009)

fire1
யார் இந்த முத்துக்குமார்
               கு. முத்துக்குமார் (K. Muthukumar)(இறப்பு: சனவரி 29, 2009, அகவை 28) ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்திய அரசு துணை போவதாக, கண்டித்து தனக்குத்தானே தீயிட்டு உயிரைப் போக்கிக்கொண்டவர் ஆவார். இவர் சென்னையில் பெண்ணே நீ இதழுக்கு பத்திரிகையாளராக வேலை செய்து வந்தவர். அதற்கு முன்னர் உதவி இயக்குநர் ஆகவும் வேலை செய்தவர்.


             தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம், புலியநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் (28) சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலக‌‌ங்கள் அமை‌ந்து‌ள்ள சாஸ்திரி பவ‌னு‌க்கு 29-01-2009 அன்று காலை வந்து திடீரென, ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் சத்தமிட்டபடி மண்எ‌ண்ணெ‌‌யை உட‌லி‌ல் ஊற்றி தீயை பற்ற வைத்தார். அவர் கையிலிருந்த ஈழத்தமிழரின் போராட்டத்திற்கன பிரசுரங்கள் காற்றில் பறந்தன. உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமர‌ன் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார். அவர் மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டு உடனடியாக அவரை காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அ‌ங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப‌ட்டும் பயனின்றி இறந்தார்.
இறக்க முன்பு முத்துக்குமார் காவற்துறையினரிடம் அளித்த மரண வாக்குமூலத்தில், "இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும். நடுவண் அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன். வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் மத்திய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன். இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களில் நிறைய புத்திசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது." என்று குறிப்பிட்டார்

'முடிந்தவரை போராடுங்கள்'

         'என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுங்கள்'; என்று அவரது கடிதத்தில் தெரிவித்திருந்தார். 


முத்துக்குமரன் நினைவுநாளில் நமது கடமைகள்! 

          தமிழீழ விடுதலைப் போராட்டம் உச்ச திசையில் இருந்தபோது நம் எதிரிகள் படையின் கொடுஞ் செயல்களைத் தட்டிக் கேட்க முடியாத கையறு நிலை கண்டு தமிழீழத் தமிழ் மக்களின் படுகொலையை தடுத்து நிறுத்த போராடியதற்காக தன் உயிரை ஆயுதமாக ஏந்தியவன் தோழன் முத்துக்குமார். இன்று நம்மிடையே தலைவனாக வாழ்ந்து கொண்டிருப்பவன்.
எந்த நோக்கத்திற்காக தோழன் முத்துக்குமார் உயிராயுதம் ஏந்தினானோ அந்த காரணம் இன்னும் அப்படியே உள்ளது. தமிழர் தலைவர்களும் இந்தியத் தமிழர் களும் உலகத் தமிழினக் காவலர் களும் ஒரு துரும்பைக் கூட அசைக்காத சூழலில் இந்திய அரசை அதிர வைத்தவன் தமிழகத் தலைமகன் முத்துக்குமார்.
முத்துக்குமரனின் ஈகத்துக்குப் பின்னரும் தமிழகத் தமிழர்கள் படுகொலை செய்யப்படு வதையோ, அல்லது தமிழ்நாடு கடல் பகுதியில் மீன் பிடிக்கத் தடை செய்யும் சிங்களப் படையை தட்டிக் கேட்க முடியவில்லை. இந்திய சீன சிங்கள அரசுகள் தமிழீழ மக்களுக்கு மட்டுமல்ல, தமிழக மீனவர்களுக்கும் தமிழ்த் தேசத்திற்கும் எதிராக உள்ளனர். கூப்பிடும் தொலைவில் ஆறரை கோடி தமிழர்கள் இருந்தும் நாதியற்ற இனமாக தமிழீழத் தமிழர் இனம் இருந்ததை தாய் தமிழகம் வேடிக்கை பார்க்க நயவஞ்சகர்கள் துணை போயினர். ஆனால், தமிழ் நாட்டில் நமது கடலில் மீன் பிடிக்க தடைசெய்யப் பட்டபோது சிங்களப் படை மீன்களை அள்ளிச் சென்றும் இந்திய கப்பல் படையை அடித்து துரத்திய போதும் வலைகளை அறுத்தும், தமிழர்களின் உதிரத்தைக் குடித்தபோதும் இருமாந்த இந்தியம் பேசியது. நீங்கள் ஏன் எல்லை தாண்டினீர்கள் என்று.. கேட்க தாய் தமிழகத்தின் ஆறரை கோடி தமிழர்கள் இருந்தும் சொந்தநாட்டில் அகதிகளாக தமிழக மீனவர் மக்கள்.
ஓட்டுப் பொறுக்க இலவசங்களை வாரி வழங்குவது... பசியால் துடிக்கும் ஏழை மக்களுக்கு எலும்புத்துண்டை வீசுவது. இவர்கள் தமிழக மக்களை மனிதர்களாக மதிப்பதோ மனிதாபிமானத்துடன் நடத்துவதோ கிடையாது. சொந்த நாட்டின் வளங்களை அன்னியர் கொள்ளை அடிப்பதோ சொந்த இன மக்களை கொன்றொழிக்க ஆயுதம் வழங்குவதற்கோ இவர்களை எவரும் மிஞ்சிடக் கூடாதுஎன்பதெல்õலம் இந்தியப் பார்ப்பனியத்தின் சூழ்ச்சி யாகும். 450க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்களப் படை சுட்டுக் கொன்றாலும், இவர் களுக்கு கவலை இல்லை. இராசீவ் காந்தியை துப்பாக்கியால் அடித்து அவமானப் படுத்தினாலும் கவலை இல்லை. தமிழன் தன்மானத்துடன் வாழக் கூடாது, தமிழ்ப் பெண் நளினி விடுதலை யாகக் கூடாது. காந்தியைக் கொன்ற கோட்சே விடுதலையாகலாம். பேரறிவாளன் உள்ளிட்ட தமிழர்களும் தோழர் பொழிலனும் சிறைக் கொட்டடியில்தான் இருக்க வேண்டும்.
இதுமட்டு மல்ல, தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு, தனியார் மயம், தாராள மயம், பன்னாட்டுக் கொள்ளை சொந்தமக்களுக்கு கொலைக் களமாக கூடங்குளம், நச்சு ஆலை ஸ்டெர்லைடு எதைப் பற்றியும் கவலை இல்லை. ஏனென்றால இறையாண்மை மிக்க அரசு நமக்கு இல்லை. அதனால்தான் நாதியற்று நடுத் தெருவில் நிற்கிறோம். எத்தனை காலமாக இன்னும் அடிமைகளாக வாய் பேசா ஊமைகளாக இந்தியச் சிறைக்குள் அடைந்து கிடப்பது, இதற்காகத்தானே முத்துக்குமாரும் அவருடன் ஈகம் செய்த தமிழக மக்களும் போராடி னார்கள். அந்தபோராட்டத்தை ஈகங்களை நாம் மதிக்க வேண்டாமா? முத்துக்குமரன் இறக்கும் போது அவன் கண் முன் தோன்றிய விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டுமல்லவா? அதற்காகத்தான் நாம் ஒன்று கூட வேண்டும். முத்துக்குமாரின் கனவுநனவாக குரல் கொடுக்க வேண்டும். அந்த மாவீரன் இம் மண்ணில் தன்உயிரை ஆயுதமாக்கி ஈகம் செய்த நாளில் தமிழக மீனவர்களை படுகொலை செய்யும் சிங்கள அரசையும் துணை போகும் இந்திய அரசையும் கண்டித்து குரல் கொடுப்பதே முத்துக்குமாருக்கு நாம் செலுத்தும் வீர வணக்கம்.

 

தமிழ் தாயகத்திற்காக  
நட்சத்திரன்

வன்னி முகாங்களில் துன்புறுத்தப்படும் தமிழ்ப் பெண்கள்

கட்டுரை

வன்னி முகாங்களில் துன்புறுத்தப்படும் தமிழ்ப் பெண்கள்


        இங்கு வன்னியில் நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளன. மக்கள் தினமும் செத்துக்கொண்டு இருக்கிறார்கள். இலங்கையின் வரலாற்றில் இப்போதுதான் மிகப்பெரிய மனிதப் படுகொலை நடைபெற்று வருகின்றது. ஊடக அடக்குமுறை காரணமாக இவை வெளிவருவதில்லை. பாதுகாப்பு வலயம் என்று முல்லைத்தீவில் இலங்கை அரச இராணுவத்தினால் அறிவிக்கப்பட்ட யுத்தசூனியப் பகுதிக்குள் மக்களை உள்வர வைத்து அதற்குள் பலத்த எறிகணைத் தாக்குதலை நடத்தி பாரிய இனப் படுகொலையை இலங்கை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளுள் எறிகணைத் தாக்குதலில் மக்கள் கொல்லப்பட்டபோது, ‘பாதுகாப்பு வலயப்பகுதி இருக்கும்போது ஏன் இந்தமக்கள் புதுக்குடியிருப்பில் நின்றார்கள்’ எனக் கேள்வி கேட்ட இலங்கைப் பாதுகாப்புப் பேச்சாளர், பின்னர் உடையார்கட்டு பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்திருந்த வைத்தியசாலை மீது தாக்குதல் நடாத்தப்பட்டபோது ‘பிரதான அரச வைத்தியசாலை புதுக்குடியிருப்பில் இருக்கும்போது ஏன் மக்கள் உடையார்கட்டில் நின்றார்கள்’ என்று கேள்வி கேட்கின்றார். இது B.B.C செய்தியைக் கேட்டவர்களுக்கு நன்கு புரிந்திருக்கும். இது மற்றவர்களை முட்டாள்களாக்கும் விடயமாகக் காணப்படுகின்றது.

இன்னுமோர் சந்தர்ப்பத்தில் பேட்டி அளித்த பாதுகாப்புப் பேச்சாளர் ‘மக்களின் பாதுகாப்பு வலயம் மீது தாம் தாக்குதல் நடாத்தவில்லை’ என்று கூறிவிட்டு பின் ஒரு சந்தர்ப்பத்தில் ‘அங்கு இறந்தவர்கள் அனைவரும் புலிகள்’ என்கிறார். மக்களுக்கான பாதுகாப்பு வலயத்தினுள் ஏவப்பட்ட எறிகனைகள் புலிகளை மாத்திரம் தேடித் தாக்கியிருக்கின்றன என்பது மற்றவர்களை முட்டாள்கள் ஆக்கும் பேச்சாக உள்ளது. உண்மை அங்கு இறந்த 700க்கும் மேற்பட்டவர்களும் காயமடைந்த அனைவரும் அப்பாவித்தமிழ் மக்கள் என்பதேயாகும்.

குண்டு வீச்சிற்குத் தாக்குப் பிடிக்க முடியாது அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வரும் மக்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளனர். குறிப்பாக இளம்வயதினர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 148 பேர் எந்தவித மரணவிசாரணையும் இன்றி வவுனியா பூந்தோட்டம் மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளனர். 27-01-2009 செவ்வாய்க் கிழமை 5 இளம் பெண்களின் உடல்கள் படையினரால் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இவை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு வாய்க்குள் துப்பாக்கியால் சுடப்பட்டுக் காணப்பட்டன. இவர்களின் உடல்களில் கடிகாயங்கள் பரவலாகக் காணப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். வன்னியில் இருந்து வந்தவர்களைத் தடுத்து வைத்துள்ள நலன்புர் நிலையங்களில் இளம் வயதினர் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இராணுவத்தால் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்படுகின்றார்கள். இராணுவம் இவர்கள் தப்பிச்சென்றுவிட்டார்கள் என்று கூறித் தப்பிவிடுகின்றது.

பெற்றோரும் உறவினரும் பிள்ளைகளையும் உறவுகளையும் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கின்றனர். முகாங்களில் இளையவர்கள் அடிமைகளாக இராணுவத்தால் வேலை வாங்கப்படுகின்றனர். இவ்முகாங்களில் இருந்து வெளியில் சென்று வர அனுமதிக்கப்படுவதில்லை. இது போன்ற பல்வேறுபட்ட துன்பங்களால் மக்கள் கொல்லப்பட்டும் துன்புறுத்தப்பட்டுக் கொண்டும் இருக்கின்றனர். மேற்குறிப்பிட்ட விடயங்கள் வவுனியா, மன்னார்ப்பகுதி மக்களுக்கும் இலங்கையில் உள்ள நேர்மையான ஊடகத்துறையினருக்கும் தெரிந்த விடயமாகும். இருப்பினும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக எவரும் வாய்திறப்பதில்லை. தமிழ் ஊடகங்களில் கூட இச்செய்திகள் வெளிவருவதில்லை

வவுனியா தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களை இரவு வேளைகளில் அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறுகூடுகளுக்குள் விசாரணை என்று கூறி அழைத்துச் சென்று பலரை பாலியல் சேட்டைகளுக்கு உட்படுத்தியுள்ளனர். பலரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளனர். இங்குள்ளவர்கள் வெளியில் சென்றுவரவோ வெளியில் உள்ளவர்கள் உட்செல்லவோ அனுமதி இல்லை. இவ்விடயம் சம்மந்தமாக இங்கு சென்று வரும் வைத்தியசாலைப் பணியாளர்களுக்கு ஒரு முறைப்பாடு கிடைத்துள்ளது. ஏனையவர்கள் வெளியில் செல்லப் பயப்படுகின்றார்கள். இதைத் தடுப்பதற்கு ஏதாவது சட்டநடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும். இது போன்ற இன்னும் பல பிரச்சனைகள் உள்ளன.


- தமிழீழத்திலிருந்து செம்மதி
Reference:

Tuesday 22 January 2013

யாழ்ப்பாணத்தில் பாக்கிஸ்தான் உளவுப்பிரிவின் மையம்: ரா எச்சரிக்கை !

யாழ்ப்பாணத்தில் பாக்கிஸ்தான் உளவுப்பிரிவின் மையம்: ரா எச்சரிக்கை !




       இலங்கை வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணத்தில், பாகிஸ்தான் SIGINT நிலையம் ஒன்றை அமைத்திருப்பதாக இந்திய உளவுத் துறையான றோ கருதுவதாக தெரியவருகிறது. தகவல் வெளியாகி உள்ளது. SIGINT என்பது Signals Intelligence என்பதன் உளவு வட்டாரப் பெயர். யாழ்ப்பாணம் நகரில் உள்ள ஏதோ ஒரு இடத்தில் இருந்து இந்த ரகசிய SIGINT நிலையம் இயங்குவதாகவும், இந்தியா ட்ரான்ஸ்மிட் பண்ணும் சிக்னல்களை அங்கு கவர்ந்து, உளவு பார்ப்பதாகவும், றோ மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள உளவு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

றோ மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள உளவு அறிக்கையில், �கடந்த மூன்று நான்கு மாதங்களாக பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ., யாழ்ப்பாணத்தில் தமது நடவடிக்கைகளை அதிகப்படுத்தியது. அந்த சமயத்தில் தான் யாழ்ப்பாணத்தில் SIGINT நிலையத்தை அமைத்திருக்கலாம்� என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. றோவின் இந்த உளவு அறிக்கையை தொடர்ந்து, நேற்று டெல்லியில் இந்திய பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள் அவசரமாக கூடி ஆலோசித்தனர் என்ற தகவலும் கசிந்துள்ளது.

அப்போது இந்த விஷயத்தை இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது என்றும், பாகிஸ்தானின் SIGINT நிலையம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ளது, குறித்து இலங்கை அதிகாரிகள் விசாரணை நடத்தவேண்டும் என்று கோருவதென்றும் இந்த சந்திப்பின் போது முடிவெடுக்கப்பட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒரு நாட்டுக்கு எதிராக இன்னும் ஒரு நாட்டின் எல்லையை பயன்படுத்துவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும், சீனா ஏற்கனவே அந்தமான் தீவுகளின் கப்பல் நகர்வுகளை கண்காணிப்பதற்காக கொக்கோ தீவுகளில் இவ்வாறான கண்காணிப்பு மையத்தை அமைத்திருந்ததையும், டில்லி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிகிறது.

யாழ்ப்பாணத்தில் SIGINT நிலையத்தை அமைப்பதன் மூலம், விசாகப்பட்டினத்தில் உள்ள, ஐ.என்.எஸ். சக்ரா அணு நீர்மூழ்கி கப்பல் (சமீபத்தில் ரஷ்யாவிடம் இருந்து இந்திய கடற்படைக்காக வாங்கப்பட்டது) மற்றும் இந்தியாவின் ஏனைய நீர்மூழ்கிக் கப்பல்களின் நகர்வுகளை கண்காணிக்க பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொள்ள முடியும். இதனால் இந்த விவகாரத்தை அதி உயர்மட்ட எச்சரிக்கையாக எடுத்து நடவடிக்கை மேற்கொள்வது என்று இந்திய பாதுகாப்பு தரப்பினர் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரத்தில், இந்திய தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை, பாதுகாப்பு தரப்பினர் புரிந்து கொண்டுள்ள அளவுக்கு பொதுமக்கள் புரிந்து கொண்டிருக்க சந்தர்ப்பம் இல்லை. Believe it or not, இது தலை போகும் விவகாரம்.

கீழேயுள்ள வாக்கியத்தை நீங்கள் பல ஊடகங்களில் படித்திருப்பீர்கள்:

�மத்திய அரசு அவ்வப்போது இலங்கைக்கு சாதகமாக நடந்து கொள்கிறது. சீனா அல்லது பாகிஸ்தான் இலங்கையுடன் நெருக்கமாகி விடாமல் தடுப்பதற்காக அவ்வாறு செய்யப்படுகிறது. பாகிஸ்தான் அல்லது சீனாவும் இலங்கையும் நெருங்கினால், இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகிவிடும்�

இந்த வாதம் பெரிதாக எடுபடுவதில்லை.

காரணம், என்ன அச்சுறுத்தல் என்று யாரும் எழுதுவது கிடையாது. இந்த விவகாரங்களை விளக்கமாக தெரிந்த பலருக்கு எழுத வராது. எழுத தெரிந்த பலருக்கு, இப்படியான விவகாரங்கள் சுட்டுப் போட்டாலும் வராது. சமீபத்தில் ஒரு ஊடகத்தில், �சீனா இலங்கையில் கால்பதித்தால், அங்கிருந்து ஒரே ஏவுகணையில் இந்தியாவை தாக்க முடியும்� என்று எழுதி கிச்சுகிச்சு மூட்டினார்கள். சீனா, இந்தியா மீது ஏவுகணை ஏவுவதற்கு, அதை தூக்கிக்கொண்டு இலங்கை வரை வரத் தேவையில்லை ஸ்வாமி. அவர்களிடம் லாங் ரேஞ்ச் பாலஸ்டிக் ஏவுகணைகள் உள்ளன. சீனாவில் இருந்தே ஏவலாம். அப்படியானால் என்னங்க விவகாரம் ? சீனா, அல்லது பாகிஸ்தான் எதற்காக இலங்கையை நெருங்க கூடாது என்று மத்திய அரசு நினைக்கிறது ? இதற்கு பலவிதமான காரணங்கள் உள்ளன. அநேகம் ராணுவ ரீதியான காரணங்கள்தான். தமிழ் மீடியாக்களில் இப்படியான ராணுவ புலனாய்வு விவகாரங்கள் வெளியாவதில்லை.

சீனா, இலங்கையுடன் நெருங்க முயற்சிப்பதை மத்திய அரசு தடுக்க முயற்சிப்பதற்கான நிஜ காரணங்களில் ஒன்று, சீனா ஏற்கனவே பாகிஸ்தானுடன் சில ராணுவ டீல்களை செய்துள்ளது. அதை இந்தியாவால் தடுக்க முடிந்திருக்கவில்லை. அதே பாடத்தை சீனா, இலங்கையிலும் படிக்க விடக்கூடாது என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு. காரணம், இந்த சீனா-பாகிஸ்தான் கூட்டணி, இந்தியாவுக்கு எதிரானது.

பாகிஸ்தான் கடற்படையைப் பற்றி எந்தளவுக்கு உங்களுக்கு தெரியும்?

வெளிப்படையாக பெரிதாகப் பெயர் பெற்றிருக்கா விட்டாலும், பாகிஸ்தானின் கடற்படையும் லேசுப்பட்டதல்ல. அதுவும் கடந்த 5 ஆண்டுகளாக தனது கடற்படையை விரிவுபடுத்துவதிலும், பலமாக்குவதிலும் பாகிஸ்தான் அதீத கவனம் செலுத்தி வருகிறது. சமீப காலமாக பாகிஸ்தான் கடற்படை முன்னெப்போதும் இல்லாத அளவில் எழுச்சி பெற்றிருக்கின்றது. இன்றைய நிலையில் பாகிஸ்தானின் கடற்படையில் 25,000 பேர் உள்ளனர். இந்த 25,000 பேரும் ஒவ்வொரு விதமாக பாகிஸ்தானிய கடற்படையில் இருக்கும் 71 கப்பல்களில் இணைக்கப்பட்டுள்ளனர். பாக். கடற்படையில் உள்ள 71 கப்பல்களிலும் மிகப் பெரியவை எவை என்று பார்த்தால், 11 போர்க்கப்பல்களும், 5 நீர்மூழ்கிக் கப்பல்களும். (பாக். கடற்படையிடம் 40 விமானங்களும் உள்ளன)

இவற்றில் போர்க்கப்பல்களில் 7 நீண்டகாலத்துக்கு முன்னர் கட்டப்பட்டவை. தொழில்நுட்பமும் பழையது. சுருக்கமாக சொன்னால் விரைவில் ஓய்வு பெற வேண்டிய வயதை அடையப்போகும் 7 கப்பல்கள் பாகிஸ்தான் கடற்படையிடம் உள்ளன. ஓய்வு பெறும் இந்த கப்பல்களை மாற்றீடு செய்யப்போகும் கப்பல்கள், சீனத் தயாரிப்பு கப்பல்கள். இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையில் யுத்தம் துவங்கும் அறிகுறிகள் தென்பட்ட காலத்தில், பாகிஸ்தான் சைனாவுடன் வியாபார ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டது. அந்த ஒப்பந்தம் பற்றிய விபரங்களை இரு தரப்பும் வெளியிடவில்லை. மொட்டையாக �கப்பல் தொடர்பான ஒப்பந்தம்� என்பதுடன் நிறுத்திக் கொண்டன. இவர்கள் இரு தரப்பும் உள்ள நிலையை வைத்து, இவர்களது ஒப்பந்தங்கள் எதை பற்றியவை என்பதை ஊகிப்பது கஷ்டமல்ல. பின்னாட்களில் அந்த விவகாரமும் வெளியாகி விட்டது.

ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது, ஏப்ரல் 2006-ம் ஆண்டில்! மொத்தம் 4 போர்க்கப்பல்கள் வழங்கு ஒப்பந்தம் அது. F-22P போர்க் கப்பல்கள் அவை. இந்த ரக கப்பல்களை ஸூல்ஃபிகர் கிளாஸ் கப்பல்கள் என்பார்கள். முதலாவது கப்பல் ஜூலை 2009-ல் டிலிவரி செய்யப்பட்டது. 2-வது கப்பல் ஜனவரி 2010, 3-து கப்பல் டிசம்பர் 2010 என பாகிஸ்தான் கடற்படையில் இணைந்து கொண்டன. இந்த 3 கப்பல்களுமே சீனாவின் ஹூடொங் ஸொங்ஹூவா ஷிப்யார்டில் கட்டப்பட்டவை. 4-வது கப்பலில் உள்ளது விஷயம். இந்த சீனத் தயாரிப்பு கப்பல், சீனாவில் கட்டுப்படவில்லை. பாகிஸ்தானின் கராச்சி ஷிப்யார்டில் கட்டப்படுகிறது. பாகிஸ்தானிய அரசு அமைப்பான KSEW (Karachi Shipyard and Engineering Works), சீன வல்லுனர்களின் உதவியுடன் கட்டும் சீனக் கப்பல் இது! அடுத்த ஆண்டு (2013) கட்டி முடிக்கப்படும் என்று தெரிகிறது.



சீனா ஒருபோதும் தமது ராணுவ உபகரணங்களை தமது நாட்டுக்கு வெளியே தயாரிக்க அனுமதிப்பதில்லை. இருந்தும் தமது தயாரிப்பு போர்க் கப்பலை பாகிஸ்தானின் கப்பல் கட்டும் மையத்தில் சீன வல்லுனர்களின் உதவியுடன் உருவாக்கி கொடுக்கிறது என்பதிலிருந்து, பாகிஸ்தானும், சீனாவும் எந்தளவுக்கு ஒன்றுக்குள் ஒன்றாக நெருங்கி வந்திருக்கின்றன என்பதை புரிந்து கொள்ளலாம். இதே ஒப்பந்தத்தில் வேறு சில டீல்களும் இருப்பதாகத் தெரிகிறது.
உதாரணமாக பாகிஸ்தானுக்கு வழங்கப்படவிருக்கும் சீனாவில் நவீன ஆயுதத் தளபாடத் தொழில்நுட்பங்கள். அத்துடன், வெளியே சொல்லப்படாத எண்ணிக்கையிலான, Z-9C ரக கடற்படை பயன்படுத்தும் ஹெலிகாப்டர்கள். �வெளியே சொல்லப்படாத எண்ணிக்கை� என்று எழுதுவதன் காரணம், உளவு வட்டாரங்களில் ஒவ்வொருவர் ஒவ்வொரு எண்ணிக்கையைச் சொல்கிறார்கள். அடுத்துவரும் இரண்டில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கான காலப் பகுதியில் இருபதில் இருந்து ஐம்பது ஹெலிகாப்டர்கள் கொடுக்கப்படலாம் என்று ஒவ்வொருவர் ஒவ்வொரு எண்ணிக்கையைக் கூறுகின்றார்கள்.

எது எப்படியோ 20-க்கு குறைவான எண்ணிக்கையை யாரும் ஊகிக்கவில்லை என்பதால், குறைந்தபட்சம் 20 ஹெலிகாப்டர்கள், அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்குள் கொடுக்கப்படலாம் என்று நாங்களும் ஊகிக்கலாம். கிட்டத்தட்ட இதே காலப் பகுதியில்தான் இந்தியக் கடற்படை நவீனமயப் படுத்தப்பட்டது. உடனே, அவுட்-ஆஃப்-த-வேயாக போய் பாகிஸ்தானுக்கு உதவியது சீனா. அதாவது, இந்தியாவின் வடக்கு எல்லையில் பாகிஸ்தானை ராணுவ ரீதியில் பலமாக்கி விடுகிறது சீனா. இந்தியாவின் தெற்கு எல்லையில் உள்ளது இலங்கை. புலிகளுடன் யுத்தம் முடிந்த பின்னரும், தமது ராணுவத்தை அதே அளவில் மெயின்டெயின் செய்யும் இலங்கை, தற்போது தமது ராணுவத்தை நவீனமயப்படுத்த துவங்குகிறது. சீனா வலிய உதவி செய்ய முன்வந்தால், இந்தியா குறுக்கே புகுந்து தடுக்காவிட்டால், இலங்கை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளும்.

புது டில்லியை பொறுத்தவரை, ஏற்கனவே வேறு வழியில்லாமல் பாகிஸ்தானுக்குள் சீனாவை நுழைய விட்டாயிற்று. இலங்கைக்கு உள்ளேயும் நுழைய விட்டுவிட்டால், நாளைக்கே ஒரு யுத்தம் வந்துவிட்டால், என்னாகும்? அதுதான், தமிழகத்தில் இருந்து கரடியாக கத்தினாலும், கடிதம் மேல் கடிதம் போட்டாலும், இலங்கை ராணுவத்தினரை இந்தியாவை விட்டு வெளியேற்ற முடியாது என்கிறார்கள் டில்லியில்! வடக்கு எல்லையில் பாகிஸ்தானை பலப்படுத்தும் சீனா, காலப்போக்கில் தெற்கு எல்லையில் இலங்கையையும் பலப்படுத்தினால், இது திசையிலும் போரிட, இந்திய ராணுவம் என்ன வைகோ-சீமானின் பூண்டி படையணியை அழைக்கவா முடியும் ?


Reference: http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=3551

தமிழ் ஈழதில் தமிழ் பெயர்கள் இனி சிங்களத்தில்: சிங்களத்தின் இரகசியத் திட்டங்கள் அம்பலம்: அதிர்ச்சித் தகவல் வெளியானது !

தமிழ் ஈழதில் தமிழ் பெயர்கள்  இனி சிங்களத்தில்

சிங்களத்தின் இரகசியத் திட்டங்கள் அம்பலம்: அதிர்ச்சித் தகவல் வெளியானது ! 

          இனி இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள், அம்மாவை அம்மே என்று தான் கூப்பிடவேண்டிய நிலை தோன்றவுள்ளது. இது உண்மை தான் ஆச்சரியப்படவேண்டாம் தமிழர்களே ! கடந்த அக்டோபர் மாதம் இலங்கை அரசானது ஒரு இரகசிய சுற்றறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. இதன் அடிப்படையில் 89 தமிழ் நகரங்களுக்கு சிங்களப் பெயரைச் சூட்ட இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது.

           வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கொட்டை : பட்டகொட்ட என்றும்...... பருத்தித்துறையை பேதுருதொடுவ என்றும்..... நைனா தீவு நாகதீப என்றும்..... கிளிநொச்சி கரணிக என்றும் ...... முல்லைத்தீவு மோலடோவா என்றும் மாற்றப்படவுள்ளது தற்போது ஆதாரங்களோடு அம்பலமாகியுள்ளது. சுமார் 89 தமிழ் நகரங்கள் படிப்படியாக மாற்றம் பெறவுள்ளது என்றால் நினைத்துப் பார்க்க முடியுமா ? இனி தமிழர்கள் இலங்கையில் வாழத் தான் முடியுமா ? ஈழத் தமிழர்களுக்கு ஒரு பாரிய அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதனை எத்தனை தமிழர்கள் உணர்கிறார்கள் ? என்று தெரியவில்லை. ஆனால் தற்போது நடைபெறவுள்ள விடையமானது இலங்கையில் விடுதலைப் புலிகள் வெல்லப்பட்டதை விட மிகவும் அபாயகரமான ஒரு செயலாகக் கருதப்படுகிறது !

ஆனால் இதுவரை தமிழகத் தலைவர்கள் செய்யாத ஒரு விடையத்தை கலைஞர் கருணாநிதி அவர்கள் செய்துள்ளார். வெளியாகியுள்ள இந்த அறிக்கையை அப்படியே மொழிபெயர்த்து இலங்கை அரசின் திட்டத்தை ஒரு கடிதமாக எழுதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்க்கு அனுப்பியுள்ளார். இலங்கையில் உள்ள தமிழர் நகரங்கள் சிங்களமயமாக்கப்படவுள்ளதை அவர் தெள்ளத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார். இதுவரை இலங்கை அரசுக்கு மத்திய அரசு செய்த உதவிகள் போக, இனியாவது மிஞ்சியுள்ள தமிழர்களுக்கு உதவுங்கள் என்று அவர் பிரதமருக்கு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். பாரம்பரியமாக வாழும் ஈழத் தமிழர்கள் இலங்கைத் தீவில் அனாதைகள் ஆக்கபடும் நிலை வந்துகொண்டு இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ள 89 தமிழ் நகரங்கள் எவ்வாறு மாற்றப்படவுள்ளது என்பதனை தமிழ் மக்களாகிய நீங்களும் ஒரு முறை பாருங்கள் ! இனி உங்கள் சொந்த ஊர்களை நீங்கள் பாவிக்க முடியாத நிலை தோன்றும் ! உங்கள் பிள்ளைகளுக்கு , இப்படி ஒரு ஊர் இருந்தது என்று தான் இனி நீங்கள் கூறவேண்டி இருக்கும். பிறந்த ஊர் ... பிறந்த நாடு ... பிறந்த மண் எல்லாவற்றையும் தொலைத்த ஒரே இனம் எம் தமிழ் இனமாகத் தான் இருக்கும் ! என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை... ? இவை அனைத்தும் இலகுவாக நடக்க சிங்கள அரசுக்கு துணை நிற்ப்பதும் சில தமிழர்கள் தான் ! இவர்களின் நண்பர்களே புலம்பெயர் நாடுகளில், மேலும் சிக்கலை ஏற்படுத்துகிறார்கள். இதனால் புலம்பெயர் தமிழ் சமூகம் வேறு திசையில் செல்கிறது. இதேவேளை இந்த இடைவெளியைப் பயன்படுதி, சிங்களம் தாம் நினைத்ததை சாதித்து முடிக்கிறது. எனவே இத் தருணத்திலாவது நாம் ஒன்றுபடவேண்டியது எவ்வளவு அவசியம் என்பதனை உணருங்கள்.

இனியும் ஒன்றுபடாவிட்டால், சொந்த ஊரைத் தொலைத்த ஈழத் தமிழினமாக நாம் அலைய நேரிடும். மானங்கெட்ட தமிழனுக்கு இதுதேவையா என்று வேற்றின மக்கள் எம்மீது காறித்துப்பும் நிலை தான் மிஞ்சும் !



பின் குறிப்பு: இதில் பல நகரங்கள் ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளது. தமிழர்களால் குடும்பி மலை என்று அழைக்கப்படும் இடம் தற்போது தொப்பிக்கல என்று மாற்றம் பெற்றுள்ளது. மற்றும் சில தமிழ் ஊடகங்களும் இச் சிங்களப் பெயரையே பாவிக்கின்றது. அதுமட்டுமல்லாது பல கோவில்களின் பெயர்களும் மாற்றப்படவுள்ளது என்பதும் அதிர்ச்சியான தகவல் தான் !






Reference:
அதிர்வு:http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4409