நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Tuesday 22 January 2013

தமிழ் ஈழதில் தமிழ் பெயர்கள் இனி சிங்களத்தில்: சிங்களத்தின் இரகசியத் திட்டங்கள் அம்பலம்: அதிர்ச்சித் தகவல் வெளியானது !

தமிழ் ஈழதில் தமிழ் பெயர்கள்  இனி சிங்களத்தில்

சிங்களத்தின் இரகசியத் திட்டங்கள் அம்பலம்: அதிர்ச்சித் தகவல் வெளியானது ! 

          இனி இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள், அம்மாவை அம்மே என்று தான் கூப்பிடவேண்டிய நிலை தோன்றவுள்ளது. இது உண்மை தான் ஆச்சரியப்படவேண்டாம் தமிழர்களே ! கடந்த அக்டோபர் மாதம் இலங்கை அரசானது ஒரு இரகசிய சுற்றறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. இதன் அடிப்படையில் 89 தமிழ் நகரங்களுக்கு சிங்களப் பெயரைச் சூட்ட இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது.

           வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கொட்டை : பட்டகொட்ட என்றும்...... பருத்தித்துறையை பேதுருதொடுவ என்றும்..... நைனா தீவு நாகதீப என்றும்..... கிளிநொச்சி கரணிக என்றும் ...... முல்லைத்தீவு மோலடோவா என்றும் மாற்றப்படவுள்ளது தற்போது ஆதாரங்களோடு அம்பலமாகியுள்ளது. சுமார் 89 தமிழ் நகரங்கள் படிப்படியாக மாற்றம் பெறவுள்ளது என்றால் நினைத்துப் பார்க்க முடியுமா ? இனி தமிழர்கள் இலங்கையில் வாழத் தான் முடியுமா ? ஈழத் தமிழர்களுக்கு ஒரு பாரிய அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதனை எத்தனை தமிழர்கள் உணர்கிறார்கள் ? என்று தெரியவில்லை. ஆனால் தற்போது நடைபெறவுள்ள விடையமானது இலங்கையில் விடுதலைப் புலிகள் வெல்லப்பட்டதை விட மிகவும் அபாயகரமான ஒரு செயலாகக் கருதப்படுகிறது !

ஆனால் இதுவரை தமிழகத் தலைவர்கள் செய்யாத ஒரு விடையத்தை கலைஞர் கருணாநிதி அவர்கள் செய்துள்ளார். வெளியாகியுள்ள இந்த அறிக்கையை அப்படியே மொழிபெயர்த்து இலங்கை அரசின் திட்டத்தை ஒரு கடிதமாக எழுதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்க்கு அனுப்பியுள்ளார். இலங்கையில் உள்ள தமிழர் நகரங்கள் சிங்களமயமாக்கப்படவுள்ளதை அவர் தெள்ளத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார். இதுவரை இலங்கை அரசுக்கு மத்திய அரசு செய்த உதவிகள் போக, இனியாவது மிஞ்சியுள்ள தமிழர்களுக்கு உதவுங்கள் என்று அவர் பிரதமருக்கு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். பாரம்பரியமாக வாழும் ஈழத் தமிழர்கள் இலங்கைத் தீவில் அனாதைகள் ஆக்கபடும் நிலை வந்துகொண்டு இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ள 89 தமிழ் நகரங்கள் எவ்வாறு மாற்றப்படவுள்ளது என்பதனை தமிழ் மக்களாகிய நீங்களும் ஒரு முறை பாருங்கள் ! இனி உங்கள் சொந்த ஊர்களை நீங்கள் பாவிக்க முடியாத நிலை தோன்றும் ! உங்கள் பிள்ளைகளுக்கு , இப்படி ஒரு ஊர் இருந்தது என்று தான் இனி நீங்கள் கூறவேண்டி இருக்கும். பிறந்த ஊர் ... பிறந்த நாடு ... பிறந்த மண் எல்லாவற்றையும் தொலைத்த ஒரே இனம் எம் தமிழ் இனமாகத் தான் இருக்கும் ! என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை... ? இவை அனைத்தும் இலகுவாக நடக்க சிங்கள அரசுக்கு துணை நிற்ப்பதும் சில தமிழர்கள் தான் ! இவர்களின் நண்பர்களே புலம்பெயர் நாடுகளில், மேலும் சிக்கலை ஏற்படுத்துகிறார்கள். இதனால் புலம்பெயர் தமிழ் சமூகம் வேறு திசையில் செல்கிறது. இதேவேளை இந்த இடைவெளியைப் பயன்படுதி, சிங்களம் தாம் நினைத்ததை சாதித்து முடிக்கிறது. எனவே இத் தருணத்திலாவது நாம் ஒன்றுபடவேண்டியது எவ்வளவு அவசியம் என்பதனை உணருங்கள்.

இனியும் ஒன்றுபடாவிட்டால், சொந்த ஊரைத் தொலைத்த ஈழத் தமிழினமாக நாம் அலைய நேரிடும். மானங்கெட்ட தமிழனுக்கு இதுதேவையா என்று வேற்றின மக்கள் எம்மீது காறித்துப்பும் நிலை தான் மிஞ்சும் !



பின் குறிப்பு: இதில் பல நகரங்கள் ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளது. தமிழர்களால் குடும்பி மலை என்று அழைக்கப்படும் இடம் தற்போது தொப்பிக்கல என்று மாற்றம் பெற்றுள்ளது. மற்றும் சில தமிழ் ஊடகங்களும் இச் சிங்களப் பெயரையே பாவிக்கின்றது. அதுமட்டுமல்லாது பல கோவில்களின் பெயர்களும் மாற்றப்படவுள்ளது என்பதும் அதிர்ச்சியான தகவல் தான் !






Reference:
அதிர்வு:http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4409
 

No comments:

Post a Comment