நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Friday 28 December 2012

உலகம் அறியாத புலிகளின் கருவிகள் !

      உலகப் போர் வரலாற்றில், அமெரிக்க வல்லரசு முதற்கொண்டு சீனா, இந்தியா என்று பல நாடுகளை தம் பால் ஈர்த்த பெரும் திறமை புலிகளுக்கு உள்ளது. புலிகளின் போர் தந்திரம், அவர்கள் ஆயுதங்களை கையாண்ட விதம், உள்ளூரிலேயே அவர்கள் ஆயுதங்களை தயாரித்து அவற்றை பாவித்தது போன்ற விடையங்களே, மேற்குலகை கிலி கொள்ளவைத்தது எனலாம். அதிலும் அவர்கள் குறிப்பாக தாமே பல கருவிகளை தயாரித்து அதனைப் பயன்படுத்தியும் உள்ளனர். புலிகள் தரைப் படைப் பலம் அதிகரிக்க கடற்புலிகள் பெரிதும் உதவினார்கள். கடற்புலிகள் பலமாக இருந்த காலகட்டத்தில் இலங்கை கடற்படையினர் பாரிய அழிவைச் சந்தித்தனர். இலங்கை கடற்படைக்குச் சொந்தமான அதிவேக தாக்குதல் படகுகளான டோரா படகுகள் பல மூழ்கடிக்கப்பட்டது.

       கடலில் இரு தரப்பினருக்கும் இடையே நடக்கும் யுத்தத்தைப் பற்றித் தான் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் கடற்புலிகளோடு சண்டையிடும்போது அவர்கள் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியவில்லை என்றால், இலங்கை கடற்படையினர் உதவிக்கு, வான்படையை அழைப்பது வழக்கம். இப்படியான தருணத்தில் இலங்கை வான் படையின் உலங்கு வானூர்திகளோடும், கடற்புலிகள் பல தடவை சண்டையிட்டுள்ளனர். குறிப்பாக 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் கடற்புலிகள் மேற்கொண்ட தாக்குதலில், உலங்கு வானூர்தி ஒன்று சேதமடைந்துள்ளது. கடற்புலிகள் இலங்கை கடற்படையினரைத் தாக்கும்வேளை, புலிகளின் சுழியோடிப் பிரிவினர், பிறிதொரு அதிர்ச்சித் தாக்குதலை நடத்துவது வழக்கம். இவர்கள் பாவித்த கருவிகள் சில இதுவரை இலங்கை இராணுவத்திடம் சிக்கவில்லை. அதனை புலிகள் இலகுவாக விட்டுச் செல்லவும் இல்லை.

          ஆனால் சமீபத்தில் கிடைத்த சில புகைப்படங்களும், புலிகளின் ஆழ்கடல் சுழியோடிகள் பிரிவில் இருந்த போராளி ஒருவர் சொன்ன தகவல்களையும், அதிர்வு இணையம் வெளியிடுவதில் பெருமையடைகிறது. முல்லைத்தீவில் உள்ள மறைவான இடம் ஒன்றில் வைத்தே சில தாக்குதல் கருவிகள், தயாரிக்கப்படுவது வழக்கம் என்றும், தளபதி சூசை அவர்களின் நேரடி வழிநடத்தலில் சில கருவிகள் தயாரிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். நீருக்கு அடியில், இல்லையேல் நீர் மட்டத்தோடு, மணிக்கு 180 மைல் வேகத்தில் செல்லக்கூடிய, தற்கொலை தகடுகள் என்று இதனை அழைப்பார்கள். மிகவும் தட்டையாக வடிவமைக்கப்பட்ட இக் கலங்களின் முன் முனையில் 3 உணர் கருவிகள் இருக்கும். இதில் ஏதாவது ஒரு பொருள் வீச்சுடன் மோதுண்டால், அதனுடன் பொருத்தப்பட்டுள்ள பாரிய வெடிகுண்டு வெடிக்கும்.

       இவ்வகையான தற்கொலை தகடுகளை, இயக்க புலிகள் பல பயிற்சிகளை மேற்கொண்டிருந்தனர். முழுக்க முழுக்க உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இவ்வகையான கருவிகளைப் பாவித்து பல கடற்படைக் கப்பல்களை புலிகள் வெற்றிகரமாகத் தகர்த்துள்ளார்கள். உலகம் அறியாத, பல நுற்பமான கருவிகளை புலிகள் கண்டுபிடித்து பயன்படுத்தி உள்ளனர். இருப்பினும், இலங்கை அரசு சீனா மற்றும் இந்தியாவிடம் இருந்து வாடகைக்கும் மற்றும் அதி நவீன தொழில்நுட்ப்ப படகுகளைக் கொள்வனவு செய்த பிற்பாடே, புலிகள் சில இழப்புக்களைச் சந்திக்க நேரிட்டது என அப்போராளி மேலும் தெரிவித்தார். தாமே திரத்திச் சென்று, குறிப்பிட்ட ஒரு பொருளை அழிக்கும் ஏவுகணைகள் இருக்கும், அதே கால கட்டத்தில், தமது வளர்சிக்கேற்ப்ப அதே போன்ற சில கருவிகளை புலிகள், ஆசியாவின் ஏதோ ஒரு மூலையில் உள்ள ஒரு நாட்டில், தாமே தயாரித்துள்ளார்கள் என்றால், அது ஒட்டுமொத்த தமிழர்களுக்கே பெருமை சேர்க்கும் விடையமாக அமைந்துள்ளது அல்லவா !










Reference:
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=3777
 

கைதான யாழ்.பல்கலை மாணவர்கள் பயங்கரவாதிகளாம்! புகைப்படங்களுடன் துண்டுப்பிரசுர விநியோகம்! (துண்டுப்பிரசுரம் இணைப்பு)

     பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவான நிலைப்பாடுகள் எழக்கூடாது என்பதற்காக தமிழ் மாணவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற தோரணையில் தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் புகைப்படங்களுடன் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

       கடந்த 27ம் திகதிக்கு பின்னர் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பலர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

        இந்நிலையில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இணைந்து பல்கலைக்கழகத்தில் புலிகள் ஆதரவு சக்தியை ஏற்படுத்துவதாக அந்த பிரசுரம் சுட்டுகிறது.

         இந்நிலையில் குறித்த பிரசுரம், திட்டமிட்டு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கைதினை நியாயப்படுத்தவதற்கும், தென்னிலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் தமிழ் மாணவர்களுக்கு ஆதரவான நிலைப்பாடுகள் எழுந்துவிடக் கூடாதென்ற இனவாத நோக்கிலுமே இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

         மேலும் குறித்த துண்டுப் பிரசுரத்தில் ஜே.வி.பி அமைப்பிலிருந்து பிரிந்து சென்றிருந்த மாற்றுக்குழு (மக்கள் போராட்ட இயக்கம்) உறுப்பினர்களும், தெற்கில் வெளிவாரியாக அரசாங்கத்திற்கெதிரான புலிகளின் நிலைப்பாட்டினை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக குறித்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.


|  























Reference
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4235


பிரபாகரன் இறந்த இடத்தில் 1 நாள் உறங்க 100 டாலர் களாம் !




      ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில், களப்பு முனை என்னும் ஆடம்பர ஹோட்டல் ஒன்றை சிங்களவர்கள் நிர்மாணித்துள்ளார்கள். தமிழர்களின் எலும்புக்கூடுகள் புதையுண்டுள்ள இப் பிரதேசத்தில் நந்திக் கடல் களப்புக்கு பக்கத்தில் இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்கான விளம்பரம் என்னவென்று தெரியுமா தமிழர்களே ? அதாவது பிரபாகரன் கொல்லப்பட்ட இடமாம் ! வாழ் நாளில் ஒருமுறைதான் இங்கே நீங்கள் தங்க முடியும் ! பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் நீங்கள் உங்கள் பொழுதைப் போக்கி படுத்து உருள வெறும் 100 டாலர்கள் தான், செலவாகும் என சிங்களப் பத்திரிகையான மெளபிம விளம்பரம் வெளியிட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் ஹோட்டல் கட்டினால் சிங்களவர்கள் வருவார்கள் என்று தெரிந்தே, இவர்கள் அங்கே விடுதிகளை அமைத்து, போதாக்குறைக்கு சிங்களவர்களுக்கு உசுப்பேத்த பிரபாகரன் கொல்லப்பட்ட இடம் என்று பீலாவேறு காட்டியுள்ளார்கள். இதில் தமிழர்கள் உற்று நோக்கவேண்டிய விடையம் என்னவென்றால், இன்று மட்டுமல்ல என்றைக்குமே சிங்களவர்கள் இனத்துவேஷத்தில் இருந்து விடுபடப்போவது இல்லை என்பது தான் !

தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட இடத்தை, ஒரு கொலைக் களத்தை சுற்றுலாத்தலமாக மாற்றிய படு கேவலமான நாடு எது என்று கேட்டால் அது இலங்கையாகத் தான் இருக்க முடியும். அமெரிக்கர்கள், ஜெர்மன் நாசிகள், இடியமீன், போன்றவர்கள் செய்யத் துணியாத பல காரியங்களை இலங்கை அரச தலைவர்கள் செய்துவருகிறார்கள். ஏற்கனவே புண்பட்டுப் போயுள்ள ஈழத் தமிழர்கள் மத்தியில், மேலும் காழ்ப்புணர்வுகளை வளர்க்கவும், சிங்கள இளைய சமுதாயத்தையும் பிழையான வழியில் கொண்டுசெல்லவுமே அரச தலைவர்கள் முனைப்புக்காட்டி வருகிறார்கள்.

BBC நிருபரான ஹாரிசன் பிரான்சிஸ் அவர்கள், இது தொடர்பாக தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இவ்வாறு ஒரு சிங்களப் பத்திரிகை அநாகரீகமான முறையில் விளம்பரப்படுத்தியுள்ளதை அவர் கண்டித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.


Reference:
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4243

Thursday 27 December 2012

Iron your clothes without power……….!




IRON YOUR CLOTHES WITHOUT POWER….!

Oh god… power cut is a major trouble of our people…As an engineer, I invented a new technique to iron the clothes without Power (Power save Iron Box).

This will be useful for all especially tamilnadu peoples. In this power cut time you can iron your dresses for smart looking…. 

Save power….


Save money.....


This project is dedicated to “Manpumiku.Purachi thlaivi.Doctor.Selvi.J.Jeyalalitha”…



Power save Iron Box Model:

 

 

 




Note: Technical instruction not required for above figures…


          Try to follow the procedure and save power…
Copy Rights: Natchatran @ natchatrankalem.blogspot.com