நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Friday 28 December 2012

கைதான யாழ்.பல்கலை மாணவர்கள் பயங்கரவாதிகளாம்! புகைப்படங்களுடன் துண்டுப்பிரசுர விநியோகம்! (துண்டுப்பிரசுரம் இணைப்பு)

     பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவான நிலைப்பாடுகள் எழக்கூடாது என்பதற்காக தமிழ் மாணவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற தோரணையில் தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் புகைப்படங்களுடன் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

       கடந்த 27ம் திகதிக்கு பின்னர் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பலர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

        இந்நிலையில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இணைந்து பல்கலைக்கழகத்தில் புலிகள் ஆதரவு சக்தியை ஏற்படுத்துவதாக அந்த பிரசுரம் சுட்டுகிறது.

         இந்நிலையில் குறித்த பிரசுரம், திட்டமிட்டு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கைதினை நியாயப்படுத்தவதற்கும், தென்னிலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் தமிழ் மாணவர்களுக்கு ஆதரவான நிலைப்பாடுகள் எழுந்துவிடக் கூடாதென்ற இனவாத நோக்கிலுமே இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

         மேலும் குறித்த துண்டுப் பிரசுரத்தில் ஜே.வி.பி அமைப்பிலிருந்து பிரிந்து சென்றிருந்த மாற்றுக்குழு (மக்கள் போராட்ட இயக்கம்) உறுப்பினர்களும், தெற்கில் வெளிவாரியாக அரசாங்கத்திற்கெதிரான புலிகளின் நிலைப்பாட்டினை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக குறித்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.


|  























Reference
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4235


No comments:

Post a Comment