நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Wednesday 2 April 2014

16 ஈழத் தமிழர் அமைப்புகளுக்கு இலங்கை தடை!!

செய்தி:


               வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் புனர்வாழ்வுக் கழகம், பிரித்தானியா தமிழர் பேரவை உட்பட 16 ஈழத் தமிழர் அமைப்புகளுக்கு இலங்கை அரசு திடீரென தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

         
        இலங்கை அரசால் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகள் என்ற பட்டியலில் இடம்பெற இருக்கும் அமைப்புகள்:

1.தமிழீழ விடுதலைப் புலிகள் 
2. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (டி.ஆர்.ஓ) 
3. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு. 
4. பிரித்தானியத் தமிழர் பேரவை. 
5. உலகத் தமிழர் அமைப்பு.
6. கனேடிய தமிழ் காங்கிரஸ். 
7. ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ். 
8. உலகத் தமிழர் பேரவை. 
9. தேசிய கனேடியத் தமிழர் பேரவை. 
10. தமிழ்த் தேசிய பேரவை. 
11. தமிழ் இளைஞர் இயக்கம். 
12. உலகத தமிழர் ஒருங்கிணைப்புக் குழு. 
13. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம். 
14. தமிழீழ மக்களவை. 
15. உலகத் தமிழர் நிவாரண நிதியம். 
16. தலைமைச்செயலக குழு.

"வாத்து முட்டை " :


              அதான் சிங்களனுக்கு தமிழ், தமிழ் மொழி, தமிழ் மக்கள் என்கின்ற வார்த்தையையே புடிக்காதே... !!
        அப்புறம் எப்படி இதையெல்லாம் விட்டு வைப்பார்கள் 

No comments:

Post a Comment