நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Friday 26 April 2013

அந்தோணி ஐயா சொல்லிட்டாரு....

ஏ கே அந்தோணி: தமிழக மீனவர்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள இலங்கை ராணுவத்துக்கு அறிவுறுத்துங்கள் ...



செய்தி:தமிழக மீனவர்களிடம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள இலங்கை ராணுவத்துக்கு அறிவுறுத்துங்கள் என்று, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ கே அந்தோனி, இலங்கை அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அந்தோணி, “இந்திய மீனவர்கள் அடிக்கடி, இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதைத் தடுக்க 2008ம் ஆண்டு நல்லெண்ண அடிப்படையில், ஒப்பந்தம் போடப்பட்டது.
அதாவது இரு நாடுகளை சேர்ந்த மீனவர்கள் வழிதவறி எல்லையைத் தாண்டினால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து போடப்பட்ட அந்த ஒப்பந்தத்தில், சர்வதேச கடல் எல்லைக்கு அருகே வரும் மீனவர்களை தாக்க கூடாது என்றும், அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதை இப்போது இலங்கை அரசுக்கு நினைவூட்டி, தமிழக மீனவர்களிடம், இலங்கை ராணுவ வீரர்கள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள உத்தரவிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

"வாத்து முட்டை " :


ம்ம்... ஐயா சொல்லிட்டாரு  இனி பயபடாம மீன் புடிக்க போகலாம் ......

No comments:

Post a Comment