நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Friday 26 April 2013

சென்னை ஸ்டேடியதிற்குள் போராட்டம் நடத்த இருந்த 40 மாணவர்கள் கைது.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதும் போட்டி 25-04-13 இரவு 8 மணிக்கு நடந்தது .

      இதில் சென்னையை சேர்ந்த சன்குழுமம் நிர்வகிக்கும் சன்ரைசர்ஸ் அணியில் இலங்கை வீரர் சங்ககர காப்டனாக உள்ளதால் அதனை எதிர்த்தும் சிங்கள வீரர்கள் இந்தியாவில் எங்கும் விளையாட கூடாது என்றும் தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு , பிரபா தலைமையிலான மாணவர்கள் போராட்டம் நடத்த  ஸ்டேடியதிற்குள் செல்லவிருந்த வேளை  காவல்துறையினரால்  சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் .

   ஐபிஎல் போட்டியில் மாணவர்கள் உள்ளே நுழைந்து தமிழீழ ஆதரவு செய்தியை உலகிற்கு சொல்ல வேண்டும் என எண்ணி இருந்தனர். அனைவரும் தமிழீழ விடுதலை வேண்டும் என வாசகம் அடங்கிய சட்டையை அணிந்து கொண்டு உள்ள செல்வதாக திட்டமிட்டனர். அதற்கான ஒருங்கிணைப்பு வேலைகளை மாணவர்கள் செய்திருந்தனர்.
           எந்த வழியிலாவது போராட்டகாரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில், கிரிக்கெட் மைதானத்தை சுற்றியுள்ள சாலைகள் மற்றும் மைதானம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மேலும் நூறுக்கும் -க்கும் மேற்பட்ட இடங்களில் கூடுதல் கேமராக்கள் பொறுத்தபட்டும் அதனை மீறி மாணவர்கள் மைதானத்துக்குள் சென்று அவர்களது டிஷர்ட் களில் We Want Tamil Eelam , boycott sri lanka என்று அச்சிடப்பட்ட பனியன் துணியை உடலுக்கு போட்டு கொண்டு இருக்கையின் மேல் நின்று கீழ்க்கண்டவாறு முழக்கங்ககளையிட்டு போராட்டம் நடந்த இருந்தனர் . இதனை தொலைபேசி ஊடக ஓட்டுகேட்ட காவல்துறையினர்  மாணவர்களை   சுற்றிவளைத்து கைது செய்து காவல்நிலையத்தில் வைத்துள்ளனர்.

 மாணவர்களின் தொலைபேசி எண்ணை தந்திரமாக ஒட்டுக் கேட்ட காவல் துறை மாணவர்கள் கிரிக்கெட் திடலுக்கு அருகே வந்த போது, 40 மாணவர்களை கைது செய்தது.

சுமார் 200 காவல்துறையினர் மாணவர்களை சுற்றி வளைத்து கைது செய்தது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி மாணவர்களை கைது செய்வதாக கூறியுள்ளது காவல்துறை. கைது செய்த மாணவர்களை எழும்பூர் காவல் நிலையத்தில் வைக்கப் பட்டனர்.

இதனால் இன்று நடக்கும் போட்டி முடிவடைந்த பின் தான் மாணவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. ஏற்கனவே இந்து நாளிதழில் பிரபாகரன் என்ற மாணவர் தனது தொலைபேசியை காவல்துறை ஒட்டுக் கேட்பதாக புகார் கூறியிருந்தார். அது இன்று நிரூபணம் ஆகி உள்ளது.

மேலும் மாணவர்களை கைது செய்வதற்கு காவல்துறைக்கு எந்த உரிமையும் இல்லை. காரணம் மாணவர்கள் எந்தவித போராட்டம் செய்யவும் திட்டமிட வில்லை. மாணவர்களின் அனுமதி சீட்டையும் பறிமுதல் செய்துள்ளது காவல்துறை.

http://uyarvu.com/uyarvu/Stil/uploads/iplmaanavarpooraaddam5.jpg


new


No comments:

Post a Comment