சீனாவின் ஊடுருவல் முயற்சிகளை முறியடிப்பதற்காகஎல்லையில் படைகளைக் குவிக்க இந்தியாதிட்டமிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர்மாநிலம், லடாக்பகுதியில்அமைந்துள்ளதௌலத் பெக் ஓல்டிஎன்ற இடத்துக்குள்சீன ராணுவத்தினர்சமீபத்தில்ஊடுருவினர்.அவர்கள் அங்கு கூடாரம் அமைத்துத் தங்கியுள்ளதோடு,அதை விட்டு வெளியேறவும் மறுத்து வருகின்றனர். இந்தவிவகாரத்தால் இரு நாட்டு எல்லையில் பதற்றம்ஏற்பட்டுள்ளது. எல்லையில் மேலும் படைகளைக் குவிக்கும்நடவடிக்கையிலும் சீனா ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், 12ஆவது பாதுகாப்புத் திட்டப்படிராணுவத்தின் பாராசூட் படைப்பிரிவைச் சேர்ந்த 1,500வீரர்களை விமானம் மூலம் அழைத்துச் சென்றுஎல்லையில் குவிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. வடகிழக்குமாநிலப் பகுதிகளில் இரண்டு பட்டாலியன்கள் நிறுத்தப்படஉள்ளதாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள்தெரிவித்தன.
சமீபத்தில், சீன எல்லையையொட்டியுள்ள பகுதிகளில்கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள திஸ்பூர் மற்றும் திமாபூரைமையமாகக் கொண்ட படைப்பிரிவுகளின் கட்டுப்பாட்டில்புதிய படைப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
சீனா மறுப்பு: ஊடுருவல் செய்த இடத்திலிருந்து சீன வீரர்கள்உடனடியாக வெளியேற வேண்டும் என்ற இந்தியாவின்கோரிக்கையை சீனா தொடர்ந்து அலட்சியப்படுத்திவருகிறது. தங்கள் வீரர்கள் லடாக் பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டவில்லை என்று சீனாதொடர்ந்து கூறி வருகிறது.
இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளரர் ஹுவா சுன்யிங் கூறுகையில், ""இரு தரப்புஒப்பந்தங்களை முழுவதுமாகப் பின்பற்றியே சீனப்படைவீரர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்தியஎல்லையையொட்டி அமைந்துள்ள சீனப் பகுதிகளில்வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள்எப்போதுமே எல்லை தாண்டியதில்லை'' என்றார்.
மீண்டும் அத்துமீறல்: இந்தச் சூழ்நிலையில், சீன ராணுவஹெலிகாப்டர்கள் காஷ்மீர் மாநிலம் லே பகுதிக்கு சில நூறுகி.மீ. தூரத்தில் உள்ள சுமர் என்ற இடத்தில் இந்தியவான்பகுதியில் அத்துமீறிப் பறந்துள்ளன. இப்பகுதியில் சீனஹெலிகாப்டர்கள் கடந்த 21ஆம் தேதி சில மணிநேரங்களுக்குப் பறந்து வட்டமடித்ததாகவும், அங்கு சிலஉணவுப் பெட்டிகள், சிகரெட் பாக்கெட்டுகள், சீன மொழியில்எழுதப்பட்ட குறிப்புகள் ஆகியவற்றைப் போட்டு விட்டு,அவை திரும்பி விட்டதாகவும் ராணுவ வட்டாரங்கள்தெரிவித்தன.
காஷ்மீர் முதல்வர் வலியுறுத்தல்: இதனிடையே, சீனஊடுருவல் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்குமாறுமத்திய அரசை ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவலியுறுத்தியுள்ளார்.
லடாக் பகுதியில் ஊடுருவிய சீன ராணுவத்தை கடுமையாகஎச்சரிக்க வேண்டும். எல்லையில் அத்துமீறல்விவகாரத்தில் பாகிஸ்தான், சீனா ஆகிய இரு நாடுகளிடம்ஒரே விதமான, கடுமையான அணுகுமுறையைக்கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: இந்த விவகாரம் குறித்துமத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனிகூறுகையில், ""இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவம்ஊடுருவியுள்ளதாகக் கூறப்படுவதையடுத்து, அந்தப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.எல்லைக் கோட்டை இரு நாட்டு ராணுவமும் தாண்டக்கூடாது என அறிவுறுத்தி உள்ளோம். தற்போது எழுந்துள்ளபிரச்னை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்'' என்றார்
எல்லைக்குள் ஊடுருவிய படைகளை வாபஸ் பெறசீனா திடீர் நிபந்தனை
இந்தியாவுக்குள் ஊடுருவிய ராணுவத்தை வாபஸ் பெறவேண்டுமானால், எல்லையில் புதிதாக கட்டியுள்ள இந்தியராணுவ அரண்களை இடிக்க வேண்டும் என்று சீனாநிபந்தனை விதித்துள்ளது. இந்தியா இதை ஏற்க மறுத்துமேலும் படைகளை குவித்து வருவதால் பதற்றம்அதிகரித்துள்ளது. அடுத்த மாதம் இந்தியா வரதிட்டமிட்டுள்ள சீன பிரதமரின் வருகை ரத்தாகுமா என்றகேள்வி எழுந்துள்ளது.
காஷ்மீரில் லடாக் பகுதியில் கடந்த 15ம் தேதி இரவு இந்தியஎல்லைக்குள் சீன ராணுவத்தினர் 10 கி.மீ. தூரம்ஊடுருவியதுடன் கூடாரம் அமைத்துள்ளனர். இதுகுறித்துஅறிந்தவுடன் சீனாவின் கவனத்துக்கு மத்திய அரசுகொண்டு சென்றது. எல்லையில் இருதரப்புராணுவத்தினரும் பேச்சு நடத்தி வருகின்றனர். தூதரகஅளவிலும் பேச்சுக்கள் நடக்கிறது. ஊடுருவலுக்குமுன்பிருந்த நிலைக்கு சீன வீரர்கள் திரும்ப வேண்டும்என்று இந்தியா கூறுகிறது. ஆனால், ஊடுருவலே இல்லைஎன்றும் எல்லைப் பகுதியில் தங்கள் வீரர்கள் ரோந்தில்ஈடுபட்டுள்ளதாகவும் சீனா கூறுகிறது.
மேலும், தங்கள் ராணுவத்தை திரும்ப பெறவேண்டுமானால் லடாக் பகுதியில் பாதுகாப்பு மற்றும்கண்காணிப்புக்காக இந்தியா அமைத்துள்ள அரண்களைஇடிக்க வேண்டும் என்றும் சீனா திடீர் நிபந்தனைவிதித்துள்ளது. சீனாவின் இந்த கோரிக்கையை இந்தியாஏற்கவில்லை. தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரைபடைகளை திரும்ப பெற முடியாது என்று சீனா முரண்டுபிடிக்கிறது. சீன ராணுவத்தின் ஊடுருவலால் லடாக்பகுதிக்கு ஏற்கனவே நமது ராணுவம் விரைந்துள்ளது.அந்நாடு பிடிவாதம் பிடிக்கும் நிலையில் மேற்கொண்டுபடைகளை இந்தியா குவித்து வருகிறது. இதனால்,எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
திட்டமிட்ட ஊடுருவல்: லடாக்கில் ஊடுருவல் நடப்பதற்குஒரு மாதத்துக்கு முன்பே, எல்லை பகுதியில்தேவையில்லாமல் படைகளை அதிகரிக்கக் கூடாதுஎன்றும், இரவு ரோந்துகளை தவிர்த்தல், உள்ளூர் ராணுவகமாண்டர்கள் அளவில் இருதரப்பு கூட்டங்கள் அடிக்கடிநடத்துவது போன்ற அம்சங்களை கொண்ட வரைவுஒப்பந்தத்தை சீனா இந்தியாவிடம் அளித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், அந்நாட்டு ராணுவத்தினர் இந்தியபகுதிக்குள் ஊடுருவியிருப்பது திட்டமிட்டு நடந்ததாகவேகருதப்படுகிறது. ஒப்பந்தத்தை ஏற்குமாறு இந்தியாவைநிர்பந்திக்கவே ஊடுருவல் நடந்திருப்பதாகவும் சர்வதேசஅரங்கில் பார்க்கப்படுகிறது. படை குறைப்பு உள்ளிட்ட சிலஅம்சங்கள் இந்தியா தரப்பில் ஏற்கனவே கூறப்பட்டவை.லடாக்கில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காணமுயற்சித்து வரும் நிலையில், சீனாவின் ஒப்பந்தத்தையும்ராணுவ அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது.
No comments:
Post a Comment