நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Tuesday 14 May 2013

கண்ணதாசன் அவர்கள் மணிமொழிகள் !

  • தேவைப்பட்டாலொழியக்    கோபம்  கொள்ளாதே.
  • நன்மை    செய்தவனுக்கு  நன்றி  காட்டு.
  • தீமை  செய்தவனை  மறந்து  விடு.
  • எதையும்  சாதிக்க  நிதானம், அற்புதமான  ஆயுதம்.
  • வென்றவனுக்கு  மலையும்  கடுகு. தோற்றவனுக்கு  கடுகும்  மலை.
  • ஆணவமும்,  அழிவும்  இறைட்டைக்  குழந்தைகள்.
  • அற்ப  ஆசைகள்  பெரிய  வெற்றியைத்  தேடித்  தருவதில்லை.
  • சோம்பி  நிற்கும்  மனிதனிடம்  துன்பங்கள்  உற்ப்பத்தியாகின்றன.
  • தாய்ப்பால்  கொடுக்காத  குழந்தைகளுக்கு  தாய்ப்பாசம்  இருக்காது.
  • இலக்கியங்கள்  எல்லாம்  மனிதர்களுடைய  அனுபவத்தில்  உதித்தவையே.
  • நீயாகவே  முடிவு  செய். நீயாகவே  செயல்  படு.
  • முடிந்தால்  நன்மை  செய். தீமை  செய்யாதே.
  • சினிமா-பயன்  படுத்த  தெரிந்தவனுக்கு  அற்புதமான  ஆயுதம்.
  • சிறு  வயதில்  வரவு  வையுங்கள்.  பெரிய  வயதில்  செலவளிங்கள்.
  • நம்  மனதளவு  எவ்வளவோ அவ்வளவு  தான்  உலகம்.
  • வாழ்வில்  நகைச்  சுவை  வேண்டும். சிரிக்காதவன்  மிருகம்.
  • அருங்குறள்  1330-ம்  கடலளவு.  அதன்  முன்  உலகம் கடுகளவு.
  • வாழ்ககையின்  ஒவ்வொரு  அணுவையும்  அனுபவிக்க  வேண்டும்.
  • எதையும்  தெரியாது  என்று  சொல்லாமல்  தெரியுமென  சொல்.
  • வாழ்வில்  துணிவு   வேண்டும்.
  • விதி  என்னும்  மூலத்தில்  இருந்து   முளைத்த  கிளையே  மதி.
  • காற்றுள்ள  போதே  தூற்றிக்கணும்  என்பதை  கவனத்தில்  வை.
  • வாழ்க்கையில்  முன்னேற  எந்த  விமர்சனத்தையும்  தாங்கிக்கொள்.
  • திறமை  உள்ளவனுக்கு  வாய்ப்பு  தூரமில்லை.

No comments:

Post a Comment