- தேவைப்பட்டாலொழியக் கோபம் கொள்ளாதே.
- நன்மை செய்தவனுக்கு நன்றி காட்டு.
- தீமை செய்தவனை மறந்து விடு.
- எதையும் சாதிக்க நிதானம், அற்புதமான ஆயுதம்.
- வென்றவனுக்கு மலையும் கடுகு. தோற்றவனுக்கு கடுகும் மலை.
- ஆணவமும், அழிவும் இறைட்டைக் குழந்தைகள்.
- அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித் தருவதில்லை.
- சோம்பி நிற்கும் மனிதனிடம் துன்பங்கள் உற்ப்பத்தியாகின்றன.
- தாய்ப்பால் கொடுக்காத குழந்தைகளுக்கு தாய்ப்பாசம் இருக்காது.
- இலக்கியங்கள் எல்லாம் மனிதர்களுடைய அனுபவத்தில் உதித்தவையே.
- நீயாகவே முடிவு செய். நீயாகவே செயல் படு.
- முடிந்தால் நன்மை செய். தீமை செய்யாதே.
- சினிமா-பயன் படுத்த தெரிந்தவனுக்கு அற்புதமான ஆயுதம்.
- சிறு வயதில் வரவு வையுங்கள். பெரிய வயதில் செலவளிங்கள்.
- நம் மனதளவு எவ்வளவோ அவ்வளவு தான் உலகம்.
- வாழ்வில் நகைச் சுவை வேண்டும். சிரிக்காதவன் மிருகம்.
- அருங்குறள் 1330-ம் கடலளவு. அதன் முன் உலகம் கடுகளவு.
- வாழ்ககையின் ஒவ்வொரு அணுவையும் அனுபவிக்க வேண்டும்.
- எதையும் தெரியாது என்று சொல்லாமல் தெரியுமென சொல்.
- வாழ்வில் துணிவு வேண்டும்.
- விதி என்னும் மூலத்தில் இருந்து முளைத்த கிளையே மதி.
- காற்றுள்ள போதே தூற்றிக்கணும் என்பதை கவனத்தில் வை.
- வாழ்க்கையில் முன்னேற எந்த விமர்சனத்தையும் தாங்கிக்கொள்.
- திறமை உள்ளவனுக்கு வாய்ப்பு தூரமில்லை.
நட்ச்சத்திர களம்
களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.
எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.
- நட்ச்சத்திரன்
Tuesday 14 May 2013
கண்ணதாசன் அவர்கள் மணிமொழிகள் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment